இலங்கையில் வெப்பநிலை அதிகரிப்பு குறித்து எச்ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில்”அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த பகுதிகளில் உள்ள மக்கள், நீர்ச்சத்து குறைபாடு, நீரிழப்பு காரணமாக வெப்ப தசைப்பிடிப்பு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக அதிக களைப்பு போன்றவற்றை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.