சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு சுவிட்சர்லாந்தின் ஸொபின்ஜென் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காயமடைந்தவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
43 வயதான ஸ்பெய்ன் நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தனி நபர் ஒருவரின் செயற்பாடு எனவும் பொதுமக்களுக்கு ஆபத்து கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.