பொதுவாக நடுவானில் பறக்கும் விமானங்களில் காற்று கொந்தளிப்பு அல்லது இயந்திரக் கோளாறுகள் காரணமாக சேதங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் என்பது பொதுவாக பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அச்சமாக காணப்படும்.
எனினும் பறவைகள் விமானங்களில் மோதுண்டு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறைத்து மதிப்பிடக் கூடியவை அல்ல.
கடந்த ஏப்ரல் மாதம் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக விமானத்தில் 39 கொக்குகள் மோதுண்டு கொல்லப்பட்டன.
ஓராண்டுக்கு முன்னதாகவும் மும்பையில் விமான நிலையம் அமைக்கும் போது பறவைகளினால் விமானங்களுக்கும் விமானங்களால் பறவைகளுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
கரையோர பகுதிகளில் காணப்படும் விமான நிலையங்களில் பறவைகளினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
மும்பையில் இடம்பெற்ற விபத்தில் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படவில்லை என்ற போதிலும் கொக்குகள் பல கொல்லப்பட்டிருந்ததுடன்
விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
எனினும் விமானம் சேதமடைந்திருந்ததாகவும் இதனால் மறுநாள் டுபாய்க்கு மேற்கொள்ள இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானங்களில் பறவைகள் மோதுருவதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டிலும் பதிவாகின்றன.
அமெரிக்காவில் மட்டும் விமானங்களில் பறவைகள் மோதும் சம்பவங்கள் 14,000 அளவில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு 1500 பறவைகள் விமானத்தில் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானங்களில் அதிக அளவு பறவைகள் மோதும் நாடாக அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
ஒவ்வொரு 10 ஆயிரம் விமான பயணங்களின் போதும் எட்டு தடவைகள் பறவைகள் மோதுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஜெர்மனியின் டெப்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் நெதர்லாந்தின் விமான வழிகாட்டல் நிறுவகம் என்பன கூட்டாக இணைந்து இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.
உயரமான இடங்களில் அல்லது நடுவானில் பறவைகள் மோதும் சந்தர்ப்பம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் விமானம் தரையிறக்கப்படும்போது அல்லது விமானம் புறப்படும் போது பறவைகள் பறக்க கூடிய உயரம் உடைய இடங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையங்களுக்கு அருகாமையில் பறவைகள் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொள்வது அதிகம் என்பதால் இவ்வாறான விபத்துகளும் அதிக அளவில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 31 ஆண்டுகளில் உலகில் பறவைகள் மோதுண்ட காரணத்தினால் இடம்பெற்ற விபத்துகளில் 292 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் விமானங்களில் பறவைகள் மோதுண்ட காரணத்தினால் 340 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டம் அல்லது சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனேகமான விபத்துக்கள் விமான நிலையங்களுக்கு அருகாமையில் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.