இத்தாலியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஆறு சுவிஸ் பிரஜைகள் காயமடைந்துள்ளனர்.
44 வயதான சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவத்தை சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.
இத்தாலியின் தென் பகுதியான பாரி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.