ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி

Must Read

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பலாச்சி உயர்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

14 வயதான மாணவர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் இரண்டு மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பாச்சி பாடசாலையில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்படலாம் என தொலைபேசி வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் பாடசாலைகளில் இடம்பெற்ற 45ம் துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இந்த தாக்குதல் கருதப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.