அரசியலில் இருந்து தாம் ஓய்வு பெற போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலுக்கு தாம் பூரண ஆயத்தநிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி இலகு வெற்றி ஈட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் ஓய்வு பெறுவதில்லை எனவும் இம்முறை தேர்தலில் போட்டியிடாமை அரசியல் அரசியலில் இருந்து ஒதுங்கியதாக கருதப்பட வேண்டியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
சசீந்திர ராஜபக்ஷ மொனராகல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதாகவும் இம்முறை தேர்தலில் 113 ஆசனங்களை தம்மால் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.