19.6 C
Switzerland
Monday, May 19, 2025

பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு

Must Read

இலங்கையில் பண்டிக்கைக் காலத்தில் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரிசி, தேங்காய், தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக குறைந்த வருமானம் ஈட்டுவோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் வெள்ளை பச்சை அரிசியின் விலை 240 முதல் 260 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஒரு தேங்காய் 220 முதல் 240 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES