அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் அரசாங்க நிறுவனங்களது செயற்திறனை மேம்படுத்தும் ஆலோசகர்களாக செயற்படும் எலொன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியின் வீசா கொள்கைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ராம்ப், குடியேறிகளுக்கு எதிரான கொள்கைகளை பிரசாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அவரது நெருங்கிய சகாக்களான விவேக் ராமசாமி மற்றும் மஸ்க் ஆகியோர் உயர் தொழில் தகுதியுடையவ வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வீசா வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கருத்து, ட்ராம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமசாமி மற்றும் மஸ்க் ஆகியோர் தொழில் தகமையுடையவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி வீசா வழங்கப்பட வேண்டுமென தெரிவித்திருந்தனர்.
எனினும், இவ்வாறு வீசா வழங்குவதனால் உள்நாட்டு தொழிற் சந்தை பாதிக்கப்படும் என ட்ரம்பின் ஆதரவாளர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
குடியேறிகளுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை பின்பற்றும் அதேவேளை இவ்வாறு உயர் தகுதி அடிப்படையில் வீசா வழங்குவது பொருத்தமற்றது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.