கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என்பனவற்றை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
குறித்த இரண்டு விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்வது குறித்த முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவத்தின் நிதி உதவியுடன் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வது குறித்த சாத்திய ஆய்வு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை வான் பரப்பு பிராந்தியத்திற்கு போட்டியாக அமையக் கூடிய விமான நிலையங்களைக் கொண்ட இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா தவிர்ந்த ஏனைய நாடுகளிடமிருந்து இந்த முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மேலும் விஸ்தரிக்கவும் புதிய முனையங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோன்று யாழ்ப்பாண விமான நிலையமும் விஸ்தரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.