தென்கொரியாவில் இடம் பெற்ற விமான விபத்தில் குறைந்தபட்சம் 122 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவின் முஹான் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
54 ஆண்களும் 57 பெண்களும் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
விமான பணியாளர்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிர் தப்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜஜு எயார் ஜெட்லைனர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் சுமார் 181 பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு போயிங் விமான நிறுவனம் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளது.
போயிங் 737-800 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து தென்கொரியா நோக்கி பயணம் செய்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிறந்த விமான பாதுகாப்பு கட்டமைப்பை கொண்ட விமானமாக இந்த விமானம் கருதப்படுகின்றது.
இந்த விமான விபத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு குறைவு என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமான நிலையத்தின் கருப்பு பெட்டியின் ஊடாக விமான விபத்திற்கான காரணங்களை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தை தென்கொரியாவின் பதில் ஜனாதிபதி சாய்ஸ் சாங் மார்க் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த பகுதியை அனர்த்த வலயமாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த விமான விபத்து பறவையொன்று மோதுண்டதால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த விபத்துக்கான சரியான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.