சுவிட்சர்லாந்தில் போலியான கையொப்பங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது வாக்கெடுப்ப நடத்துவது போன்ற தேவைகளுக்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுவது வழமையானது.
இவ்வாறு திரட்டப்படும் கையொப்பங்களில் போலி கையொப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் மருந்துப் பொருள் விநியோக ஒழுங்கமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கையொப்பங்கள் திரட்டப்பட்டிருந்தன.
இவ்வாறு திரட்டப்பட்ட கையொப்பங்களில் சுமார் 3500 கையொப்பங்கள் போலியானவை கண்டறியப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட முன்னதாக இவ்வாறு மக்களின் கையொப்பங்கள் திரட்டப்பட்டு, பொது வாக்கெடுப்புகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.