-2.3 C
Switzerland
Wednesday, January 15, 2025

புத்தாண்டில் அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்

Must Read

இன்றைய புத்தாண்டு தினத்தில் அமெரிக்காவில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

நபர் ஒருவர் வாகனத்தை மக்கள் மீது வேண்டுமென்றே மோதசெய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் மேலும் 35 பேர் காயமடைந்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்த இடம் ஒன்றில் குறித்த நபர் வாகனத்தை வேகமாக செலுத்தி மக்களை மோதச் செய்துள்ளார்.

அமெரிக்காவில் நியூ ஓர்லாண்ட் பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுடன் வெளிநாட்டு தீவிரவாத கும்பல்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை அமெரிக்க அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES