9 C
Switzerland
Wednesday, May 21, 2025

இலங்கையில் கடவுச்சீட்டு வழங்குவதில் மீண்டும் சர்ச்சை

Must Read

இலங்கையில் கடவுச்சீட்டு வழங்குவதில் மீண்டும் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக கடவுச்சீட்டு வழங்குவதற்கான விலை மனு கோரல்கள் தொடர்பில் இந்த சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் அரையாண்டு பகுதிக்கு தேவையான கடவுச்சீட்டு கையிருப்பே உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இன்னமும் அரசாங்கமும் புதிய கடவுச்சீட்டு விநியோகம் செய்வது குறித்த விலை மனுக் கோரல்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கம் இக்கடவு சீட்டை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் இந்த ஈ கடவுச்சீட்டுக்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிறுவனம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எனவே இந்த வழக்கு விசாரணை பூர்த்தி ஆகும் வரையில் குறித்த நிறுவனத்திடம் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அதிக எண்ணிக்கையிலானோர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள கடவுச்சீட்டுக்களுக்காக விண்ணப்பிக்கின்றனர்.

இந்த நிலையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெரிசல் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES