எதிர்வரும் 10ம் திகதி நியூயோர்க் நீதிமன்றில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு எதிரான தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி ட்ராம்ப் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ட்ராம்ப் அரசியல் கையூட்டு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனது நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக்கூடிய தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்காக இவ்வாறு கையூட்டு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலான வழக்கில் ட்ராம்ப்பிற்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கின் தண்டனை விதிப்பு தீர்ப்பின் போது ட்ராம்ப் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்திருக்க மாட்டார் என்ற காரணத்தினால், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் ஜனாதிபதியின் சிறப்புரிமை ட்ராம்பிற்கு கிடைக்கப் பெறாது என தெரிவிக்கப்படுகின்றது.
நீயூயோர்க்கின் நீதிமன்ற நீதிபதி ஜூவான் மெர்சான் இந்த தண்டனையை விதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டனை விதிப்பு தினமான 10ம் திகதி நேரிலோ அல்லது காணொளி தொழில்நுட்பம் ஊடாகவோ முன்னிலையாகுமாறு ட்ராம்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், ட்ராம்பிற்கு சிறைத்தண்டனை விதிப்பதற்கு தாம் திட்டமிடவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ட்ராம்ப் மீது போலி வழக்குகள் தொடரப்பட்டு குற்றம் சுமத்தப்படுவதாக அவரது தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.