கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் புதிய தலைவர் தெரிவு மேற்கொள்ளப்படும் வரையில் தாம் பிரதமர் பதவியில் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ கடந்த பதினொரு ஆண்டுகளாக லிபரல் கட்சியின் தலைமைப் பதவியை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் அவர் பிரதமராக பதவி வகிக்கின்றார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் திகதி வரையில் கனடிய நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தாம் தொடர்ச்சியாக போராடியதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.