திபெத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீபத்தின் பின்தங்கிய பதிவான இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேபாளம் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகள் வரையில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு நேரம் காலை 9:30 மணி அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலடுக்கம் சுமார் 7.1 ரிச்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் நில அதிர்வை தொடர்ந்து பல்வேறு நில அதிர்வுகள் அடுத்தடுத்து பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.