ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
சீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஜனாதிபதி அனுர சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி,சீனப் பிரதமர் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.