ஈரானிய அணுத்திட்டம் தொடர்பில் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட உள்ளது.
ஈரான் நாட்டு பிரதிநிதிகளும் ஐரோப்பாவின் ஜெர்மன், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மாநாடு நடைபெற உள்ளதாகவும் இது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னரும் இந்த அணுத்திட்டம் தொடர்பில் ஜெனிவாவில் குறித்த நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானிய அணுத்திட்டம் குறித்து ஐரோப்பிய நாடுகள் கரிசனை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு நாடுகளினதும் ராஜதந்திரிகள் சுவிட்சர்லாந்தில் சந்தித்து அணுத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.