20.7 C
Switzerland
Monday, May 19, 2025

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி கைது

Must Read

தென் கொரியாவின் யூன் சூக் யியோலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாட்டின் ஊழல் தவிர்ப்பு விசாரணையாளர்கள் யியோலை கைது செய்துள்ளனர்.

யியோலை கைது செய்ய முயற்சிக்கப்பட்ட போது ஒரு மணித்தியாலம் அவரது பாதுகாவலர்களும், ஆதரவாளர்களும் அதனை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.

யியோல் அண்மையில் நாட்டில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தார் இதனைத் தொடர்ந்து நாட்டில் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்டு, பதவி நீக்கப்பட்டார்.

ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினர் யியோலிடம் தற்பொழுது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தமாத ஆரம்பத்திலும் யியோலை கைது செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது ஓர் சட்டவிரோத விசாரணை எனவும் , நாட்டில் இரத்த வெள்ளம் ஏற்படுவதனை தடுக்கும் நோக்கில் விசாரணைகளுக்கு இணங்கியதாகவும் யியோல் தெரிவித்துள்ளார்.

இந்த கைதிற்கு ஆதரவினையும் எதிர்ப்பையும் பொதுமக்கள் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவின் அரசியல் குழப்ப நிலைமை மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES