மக்கள் மாறுவதற்கு விரும்பவில்லை எனவும் அவ்வாறான பின்னணியில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் அமைச்சர் சமன்த வித்யாரட்ன தெரிவித்துள்ளார்.
மக்கள் அர்ப்பணிப்புக்களை செய்யாவிட்டால் மாற்றங்களை மேற்கொள்ள முன்னெடுக்கப்படும் திட்டங்களை அமுல்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் மாறாமல் ஏனையவர்களில் மாற்றம் ஏற்பட வேண்டுமென இன்று பலர் எதிர்பார்க்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலர் மாற்றங்களை விரும்புகின்றார்கள் அந்த மாற்றமானது தம்மில் மாற்றமின்றி ஏனையவர்களது மாற்றமாகவே அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் கல்வித்துறையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென விரும்புகின்றனர், கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் பொலிஸார் மாற வேண்டுமென விரும்புகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்கள் முதல் அனைத்தும் மாற்றம் பெற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனைவரினதும் மாற்றமின்றி இந்த புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.