ஜெனீவா விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்றின் பின்னர் ஜெனீவா விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
எனினும் தற்பொழுது கோவிட்டுக்கு முன்னைய நிலையில் பயணிகள் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை 2019ம் ஆண்டை விடவும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனினும், கடந்த 2024ம் ஆண்டில் விமானங்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டை விடவும் குறைவு என தெரிவிக்கப்படுகின்றது.