அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வார இறுதியில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான யோசனைக்கு எதிராக நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த செயலி அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இவ்வாறு தடை விதிக்கப்பட்டால் அது சீனாவுடனான உறவுகளை மேலும் விரிசலைடையச் செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
டிக் டாக்கிற்கான தடையை எவ்வாறு அரசாங்கம் அமுல்படுத்தும் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த 170 மில்லியன் பேர் டிக் டாக் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, டிக் டாக் தடை குறித்த தீர்மானம் தமது கைகளில் உள்ளது என புதிய ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.