இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பிராந்திய வலயத்தில் இவ்வாறு 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 264 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, போர் நிறுத்தம் தொடர்பில் இஸ்ரேல் அமைச்சரவை இன்றைய தினம் முக்கிய தீர்மானம் எடுக்க உள்ளது.
காசா போர் நிறுத்தம் தொடர்பில் ஈரான் மற்றும் எகிப்து ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.