அமெரிக்காவின் 47ம் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பதவிப் பிரமாணத்தின் பின்னா இன்றைய தினம் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சில உத்தரவுகளை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எல்லைப் பகுதிகளில் தேசிய அவசர நிலைமையை இன்றைய தினம் பிரடகனம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மெக்ஸிக்கோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எல்லைச் சுவர் நிர்மானப் பணிகளை மீள ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஏதிலிகள் மற்றும் குடியேறிகள் மெக்ஸிக்கோவில் தங்கியிருக்கும் போதே அவர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் திட்டமொன்றை ட்ரம்ப் அறிமுகம் செய்ய உள்ளார்.
பதவிப் பிரமாண நிகழ்வு திறந்த வெளியில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் கடுமையான குளிருடான காலநிலை காரணமாக இந்த நிகழ்வு கட்டிடத்திற்குள் நடாத்தப்பட்டது.
வெளிநாட்டு தலைவர்கள், ராஜதந்திரிகள், செல்வந்தர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், எலொன் மஸ்க், சுந்தர் பிச்சை போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிப்போர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்குற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவிப் பிரமாண நிகழ்வின் பாதுகாப்பிற்காக வொஷின்டனில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவானார்.
அதன் பின்னர் 2024ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உள்ளிட்ட பலர் புதிய ஜனாதிபதி ட்ரம்பிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஜே.டி. வென்ஸ் துணை ஜனாதிபதியாக பதவிப் பிராணம் செய்து கொண்டுள்ளார்.