உலகின் முதல் நிலை சர்வதேச தொண்டு நிறுவனங்களில் ஒன்றான உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபனத்தில் வகித்து வரும் உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுகாதார முகவர் நிறுவனமான உலக சுகாதார ஸ்தாபனத்தின் செயல்பாடுகளை கடந்த காலங்களில் விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் அவர் இவ்வாறு கடும் விமர்சனங்களை வெளியிட்டு இருந்தார்.
ஜனாதிபதி ட்ரம்பிற்கு காணப்படும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் அரசியல் ரீதியாக செயல்படுவதாகவும் பெரும் நெருக்கடிகளின் போது சரியான தீர்மானங்களை எடுக்கவில்லை என டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.