முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷவிற்கு எதிராக போதிய அளவு சாட்சியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதிச் சலவை மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்பு ஆகிய குற்றச்சாட்டுக்கள் யோசித்த மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்வதற்கு போதிய அளவு ஆதாரங்கள் காணப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றிடம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் யோசித்த ராஜபக்ஷ இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் யோசித்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
இன்றைய தினம் பெலியத்த பகுதியில் வைத்து யோசித்த கைது செய்யப்பட்டதாகவும் அவரை கொழும்பிற்கு அழைத்து வர உள்ளதாகவும் அதன் பின்னர் அவரிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
2006 ஆம் ஆண்டு ஐந்தாம் இலக்க நிதிச் சலவை சட்டத்தின் கீழ் யோசித்த சட்டவிரோத சொத்துக்கு குவிப்பில் ஈடுபட்டார் என்பதை நிரூபனம் செய்ய போதிய அளவு சாட்சியங்கள் காணப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றிடம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.