சட்டவிரோத குடியேறிகளை தடுப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த அனைத்து நிபந்தனைகளையும் கொலம்பியா அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக கொலம்பியா மீது அமெரிக்கா விதிக்கவிருந்த வரி விதிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கொலம்பியா சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவில் பிரவேசித்த குடியேறிகளை மீளவும் கொலம்பியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
கொலம்பியா ஜனாதிபதி குஷ்டவோ பியற்றோ நாடு கடத்தும் இந்த யோசனையை முன்னதாக எதிர்த்திருந்தார்.
இதன் காரணமாக பாரிய அளவில் வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ராணுவ விமானங்கள் ஊடாக சட்ட விரோத குடியேறிகளை கொலம்பியாவிற்குள் நாடு கடத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வரி விதிப்பு திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கும் குற்றவாளிகளை நாடு கடத்துவது பொருத்தமானது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.