இஸ்ரேல் லெபனானில் மேற்கொண்ட தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 134 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 12 பேர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தென் லெபானன் பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ளது.
இடம் பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு மீள திரும்பும் நிலையில் இந்த தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லெபனானுக்கு இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் இந்த போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.