உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் இந்த விடயம் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கான போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் விமான சேவை அமைச்சின் பிமல் ரட்நாயக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் அதிகரிப்பு பதிவாகியுள்ள காரணத்தினால் விமான நிலையத்தின் வசதிகளை விஸ்தரிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்த சர்வதேச விமான நிலையங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2028ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 12 மில்லியனாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.