சுவிட்சர்லாந்தில் பனிப்பாறை சரிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் பனிப்பாறை சரிவு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கீயிங் விளையாட்டு நடைபெறும் இந்த பருவ காலத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதற்காக மலைப்பாங்கான பகுதிகளுக்கு சென்று விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர்.
எவ்வாறெனினும் இந்த பனி மலை பகுதிகளில் பணிப்பாறை சரிவுகள் ஏற்படக்கூடிய அபாய நிலையை காணப்படுவதாகவும் நான்காம் நிலை அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வலாயிஸ், ரிக்கினோ மற்றும் கிராபுன்டன் போன்ற கான்டன்களில் அதிக அளவு பனிப்பாறை சரிவு குறித்த அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.