சுவிசில் சர்வதேச ரீதியில் பிள்ளைகளை தத்தெடுப்பதற்கு தடை

Must Read

சுவிட்சர்லாந்தில் சர்வதேச ரீதியில் பிள்ளைகளை தத்தெடுப்புகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு முதல் இந்த தடை நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து பிள்ளைகள் தத்தெடுக்கப்படுவதாகவும் அவ்வாறு தத்தெடுக்கப்படும் செயற்பாடுகளில் பல்வேறு முறைகேடுகள் இடம் பெறுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து சுவிஸ் பிரஜைகள் பிள்ளைகளை தத்தெடுப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

மத்திய அமைச்சரவை இது தொடர்பிலான சட்ட வரைவு ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளது.

அருமையான சட்டங்களினால் கூட பிள்ளைகள் தத்தெடுக்கப்படும்போது இடம் பெறக்கூடிய முறைகேடுகள் மற்றும் துஸ்பிரயோகங்களை தடுக்க முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே பிள்ளைகளை தத்தெடுப்பதை முற்றுமுழுதாக தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது சர்வதேச ரீதியிலான பிள்ளைகள் தத்தெடுக்கும் எண்ணிக்கை மிகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வருடாந்தம் சுமார் 30 பிள்ளைகள் தத்தெடுக்கப்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் இந்த துஷ்பயோகங்களை தடுக்கும் நோக்கில் குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.