அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிறைவேற்று அதிகார உத்தரவிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமையின் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வதற்கு ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எனினும் இந்த நிறைவேற்று அதிகார உத்தரவிற்கு அமெரிக்க மாவட்ட நீதிபதி டெபோரா போர்ட்மென் தடை விதித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த உத்தரவிற்கு தடை விதித்த இரண்டாவது நீதிபதி டெபோரா என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் உத்தரவு அரசியல் அமைப்பின் 14ம் திருத்தச் சட்டத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் எந்தவொரு நீதிமன்றமும் ட்ரம்பின் உத்தரவினை அனுமதிக்காது என நீதிபதி டெபோரா தெரிவித்துள்ளார்.
கடந்த 250 ஆண்டுகளாக பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை நாட்டில் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த மரபு மாற்றப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.