லண்டனுக்கும் ஜெனீவாவிற்கும் இடையில் ரயில் சேவை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த யோசனைக்கு வோட் கான்டனும் ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஜெனீவா கான்டனில் குறித்த யோசனைக்கு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் லாவுசான், ஜெனீவா மற்றும் லண்டன் நகரங்களுக்கு இடையில் ரயில் பாதை அமைப்பதற்கு வோட் கான்டன் ஆதரவு தெரிவித்து கான்டன் நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த திட்டம் கான்டனுக்கு நன்மை ஏற்படுத்தும் கான்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த திட்டம் தொடர்பில் மத்திய அரசாங்கமும் மத்திய ரயில் திணைக்களமும் இறுதி தீர்மானம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.