சுவிட்சர்லாந்தில் வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னணி வீட்டு மனை ஆலோசனை நிறுவனமான சிஎஸ்எல் நிறுவனம் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரிச்சில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொள்வதற்காக அதிகளவு பணத்தை செலவிட நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகளை வாடகைக்கு விடுவது குறைவடைந்துள்ளதாவும் கேள்விக்கு ஏற்ற நிரம்பல் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் வீட்டு வாடகை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் போக்கை பதிவு செய்துள்ளது.
குறிப்பாக சூரிச் நகரில் வீடுகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும் இதனால் கூடுதல் தொகைகளை கொடுத்து வீடுகளை வாடகைக்கு பெற்றுக் கொள்ள மக்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வாடகை தொகை வெகுவாக அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.