அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டம் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
காசா நிலப்பரப்பினை கைப்பற்றிக்கொள்வது தொடர்பில் அண்மைய நாட்களாக ட்ரம்ப் பேசி வருகின்றார்.
காசாவை பொறுப்பேற்றுக் கொண்டு போர் வலயத்திலிருந்து பலஸ்தீன பிரஜைகளை வெளியேற்றும் ட்ரம்பின் திட்டம் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளா வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
சுயநிர்ணய உரிமையானது சர்வதேச சட்டங்களில் மிகவும் அடிப்படையானது ஒன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் வாழும் பிரதேசங்களிலிருந்து அவர்களை பலவந்தமான அடிப்படையில் வெளியேற்றுவது சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முற்றிலும் முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசாவினை கைப்பற்றுவது குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.