தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இன்றைய தினம் இந்த அறிமுக நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.
அரச நிறுவனங்களுக்கான சகல கொடுக்கல் வாங்கல்களை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதற்கு இந்த புதிய முறை மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அரச நிறுவனங்களுக்கு மக்கள் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் டிஜிட்டல் முறையில் நேரடியாக மக்களினால் செலுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தற்பொழுது நாட்டில் 16 அரச சேவைகளில் இந்த டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் மேலும் 30 சேவைகளுக்கு இந்த திட்டம் விஸ்திரிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார விவகாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எரந்த வீரரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த டிஜிட்டல் கொடுப்பனவு முறையின் ஊடாக செலுத்தும் போது அறவீடு செய்யப்படும் கட்டணத்தை 15 ரூபாய் அளவில் குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.