9 C
Switzerland
Wednesday, May 21, 2025

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தடை செய்வது ஆபத்தானது

Must Read

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தடை செய்யும் தீர்மானம் மிகவும் ஆபத்தானது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றை தடை செய்வதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவினை அவர் பிறப்பித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடான இஸ்ரேலை இலக்கு வைத்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது தடை விதிப்பதாகவும் அவர்களுக்கு எதிராக வீசா மற்றும் நிதியியல் ரீதியான தடை விதிப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் இது தொடர்பான நிறைவேற்று உத்தரவில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான தடையானது சர்வதேச குற்றவியல் விசாரணை பொறிமுறைமையிலும் நீதி வழங்குவதிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த உத்தரவானது நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை மலினப்படுத்தும் வகையிலானது என ஐரோப்பிய ஒன்றியம் கருத்து வெளியிட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES