கடந்த அரசாங்கங்களே மின்தடைக்கு காரணம்

Must Read

நாட்டில் இன்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு கடந்த கால அரசாங்கங்களின் தூர நோக்கற்ற செயற்பாடுகளே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மின்வலு அமைச்சர் குமார ஜயடிக்கொடி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொழில்நுட்ப அறிவின்றி எடுக்கப்பட்ட தீர்மானங்களினால் இன்றைய தினம் நாட்டின் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது என அவர் குறிப்பிடடுள்ளார்.

கடந்த கால ஆட்சியாளர்களின் வழிகாட்டல்கள் பிழையானது எனவும் இதனால் இந்த நிலைமை ஏற்பட்டது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் இன்றைய தினம் பாரியளவில் மின்சாரத் தடை ஏற்பட்டது.

குரங்குகளினால் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாணந்துறை மின்விநியோக நிலையமொன்றில் குரங்கு மோதியதனால், மின்விநியோகத்தை சமனிலைப்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.