கரீபியன் தீவுகளில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விரிக்கப்பட்டுள்ளது.
கரீபியின் கடற்பரப்பில் சுமார் 7.6 ரிச்டர் அளவினுடைய நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
ஹொண்டுராஸின் வடக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக கொலம்பியா, ஹைமேன் தீவுகள் காஸ்டரிக்கா, ஹெண்டுராஸ், நிக்கரகுவா மற்றும் கியூபா போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக போட்டோரிக்கோ மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் பின்னர் அந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட செய்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.