இலங்கையில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளொன்றுக்கு ஒன்றரை மணித்தியாலங்கள் மின்வெட்டு முன்னெடுக்கப்பட உள்ளது.
இன்றைய தினமும் நாளைய தினமும் இவ்வாறு மின்வெட்டு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகக் கட்டமைப்பினை பாதுகாக்கும் நோக்கில் இந்த மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளது.
நேற்றைய தினம் இலங்கையில் நாடு முழுவதும் பாரிய அளவில் மின் தடை ஏற்பட்டது.
பிற்பகல் 3:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு இடங்களில் ஒன்றை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளது.
இதேவேளை, மின் வெட்டு தொடர்பில் முன்கூட்டிய அனுமதி எதனையும் இலங்கை மின்சார சபை பெற்றுக் கொள்ளவில்லை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.