சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் 17 நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் ஐரோப்பியர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் 17 நிறுவனங்கள் மீது ஊடறுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேக நபர்கள் சுமார் 16 மில்லியன் டொலர் பெறுமதியான பிட்காயின்களை களவாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இணைய வழியில் உலகம் முழுவதிலும் உள்ள சுமார் ஆயிரம் பேரை மிரட்டி பணம் கப்பமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை சுவிட்சர்லாந்திற்கு நாடு கடத்துமாறு சுவிஸ் அரசாங்கம் தாய்லாந்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது