ஹமாஸ் போராளிகள் பணய கைதிகளை விடுதலை செய்ய தவறினால் காசா போர் நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை பணய கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் காசா போர் நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
போராளிகள் தற்பொழுது 76 பணயக் கைதிகளை தடுத்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் எத்தனை பணைய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது குறித்து நெட்டன்யாகூ குறிப்பிடவில்லை.
இதேவேளை, இஸ்ரேலிய அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கையை மதிக்கவில்லை எனவும் மேற்கு கரை பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுஃ
மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் முடக்கி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.