9 C
Switzerland
Wednesday, May 21, 2025

ஜெர்மனியில் வாகனத்தை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் காயம்

Must Read

ஜெர்மனியில் வாகனத்தை மக்கள் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜெர்மனியின் முனிச் நகரில் இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை ஒர் தீவிரவாத தாக்குதல் என்ற அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சங்கமொன்றின் பேரணியொன்றில் குழுமியிருந்த மக்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலை 24 வயதான ஆப்கானிஸ்தான் ஏதிலிக் கோரிக்கையாளர் ஒருவர் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முனிச்சில் அமெரிக்க துணை ஜனாதிபதியும் உக்ரைன் ஜனாதிபதியும் பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்கு வருகை தரவிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபரை தண்டித்து நாடு கடத்த வேண்டுமென ஜெர்மன் அதிபர் ஒலாப் சிச்லொஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தாக்குதல்தாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES