ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் முதலாவது வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.
ஜனாதிபதி திஸாநாயக்க நாட்டு வரலாற்றில், நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் நான்காவது ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி பதவி வகித்த நிலையில் , வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளனர்.
2025 வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு அரசு எவ்வாறு முன்னேறும் என்பதைக் காண அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பெரும் ஆதரவைப் பெற்ற அரசாங்கம், அதன் பொருளாதார மாற்றக் கொள்கைகளை இந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளிப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
அரசாங்கத்தின் முக்கியமான தலைவர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வும் உட்பட, நிவாரணம் வழங்கும் திட்டங்களை அறிவிக்கலாம் என எதிர்வுகூறியுள்ளனர்.
முந்தைய அரசாங்கத்தைப் போலவே, தற்போதைய அரசாங்கமும் சர்வதேச நிதி நாணய நிதியத்துடன் (IMF) இணைந்து பணியாற்றி வருகிறது.
IMF உடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, நாடு தனது வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை 2025 ஆம் ஆண்டுக்குள் 5.2% ஆக குறைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024 ஆண்டில் இந்த இலக்கு 7.6% ஆக காணப்பட்டது.
அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் குழு நிலை விவாதம் 2025 மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.