கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
டெல்டா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
கனடாவின் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
80 பேருடன் பயணம் செய்த இந்த விமானம் ஓடு பாதையில் வைத்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரொறன்ரோவில் கடந்த சில தினங்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பியர்சன் விமான நிலையப் பகுதியில் பலத்த காற்று வீசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து காரணமாக டெல்டா விமான சேவை நிறுவனம் பியர்சன் விமான நிலையத்திற்கான அன்றைய நாளுக்கான விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது.
டெல்டா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான 4819விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விமான விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.