அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு பனாமா மற்றும் கோஸ்டாரிகா நாடுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் , பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கிருந்து அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவிலிருந்து 300 பேர் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த 300 பேரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர்.
இதேவேளை இந்த 300 பேரில் சுமார் 40 சதவீதம் பேர் சொந்த நாடுகளுக்குத் திரும்ப விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பனமா அரசு ஒரு ஹோட்டலில் அவர்களை தங்க வைத்துள்ளது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உணவுகள் வழங்கும் பணியை பனமா அரசு செய்து வருகிறது.
இது தொடர்பாக பனாமா ஜனாதிபதி கூறுகையில்
“அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 300 பேர் பனாமாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் 171 பேர் அவர்களுடைய சொந்த நாடுகளுக்குச் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளனர்.