கனடாவின் டொராண்டோவில் விபத்துக்குள்ளான டெல்டா எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் நிறுவனம் 30000 டொலர் இழப்பீடு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விமானத்தில் பயணித்த 76 பயணிகளும் மற்றும் 4 பணியாளர்கள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தனர்.
அமெரிக்காவின் மினசோட்டா மினியாபொலிஸில் இருந்து புறப்பட்ட டெல்டா விமானம், டொராண்டோவில் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் தீப்பற்றி, வழுக்கி கவிழ்ந்து தலைகீழாக விபத்துக்குள்ளானது.
ஆனாலும் பெரும்பாலான பயணிகள் எந்தக் காயமுமின்றி வெளியேறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தற்போது, விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணை கனடிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தால் (TSB) நடைபெற்று வருகிறது. விமானத்தின் “Cockpit Voice Recorder” மற்றும் “Flight Data Recorder” மீட்கப்பட்டுள்ளன.
இழப்பீடு எந்த விதமான நிபந்தனையும் இன்றி வழங்கப்படுகிறது எனவும், இது பயணிகளின் சட்ட உரிமைகளை பாதிக்காது எனவும் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணிகள் எதிர்கொள்ளும் உடனடி நிதிச்சிக்கல்களை சமாளிக்க இது முன்னெச்சரிக்கை கொடுப்பனவாக வழங்கப்படகின்றது என அறிவித்துள்ளது.