இலங்கையில் சில இடங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் இன்றைய தினமும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 29 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கம்பஹா ஜாஎல பமுனுகம பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களினால் குறித்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்காக டி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயரிழந்த நபர் கடவத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர் யார் என்றோ எதற்காக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்தோ எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை.
அண்மைய நாட்களில் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இடம் பெற்று வரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடும் அதிருத்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.