அமெரிக்காவின் முக்கிய சட்ட அமலாக்க அமைப்பான FBIயின் தலைவராக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர் மற்றும் குடியரசுக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளராக கருதப்படும் காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
காஷ் படேலின் நியமனம் உறுதி செய்ய 51-49 வாக்குகளுடன் செனட் ஒப்புதல் அளித்தது.
குடியரசுக் கட்சி உறுப்பினர்களான சுசன் காலின்ஸ் மற்றும் லிசா முர்கோவ்ஸ்கி ஆகியோர் இந்த நியமனத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
காஷ் படேல் FBIயை டிரம்ப்பின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்ற அச்சத்தால், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
FBIயில் அரசியல் தலையீடு இருக்காது, பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது” என்று படேல் உறுதியளித்தார்.
FBI இயக்குநர் பதவிக்காலம் 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளை மாளிகையை மீண்டும் கைப்பற்றியதும், டிரம்ப், முன்னாள் இயக்குநர் கிறிஸ் ரேயை பதவி விலகும்படி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரே ராஜினாமா செய்ததும், படேலின் நியமனம் உறுதி செய்யப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படேல், டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் காங்கிரஸ் உதவியாளராக பணியாற்றிய போது, 2016 தேர்தலில் ரஷ்யாவுடன் டிரம்ப்பின் தொடர்பை விசாரித்த FBIப் பிரிவை எதிர்க்க முக்கிய ஆவணங்களை அமெரிக்க அரசின் ரகசியத்தகவலிலிருந்து வெளியிட போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.