19.6 C
Switzerland
Monday, May 19, 2025

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

Must Read

கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

நேற்றைய தினம் இரவு கொட்டாஞ்சேனையில் சசிகுமார் என்ற தமிழ் வர்த்தகர் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வர்த்தக நிலையத்தின் எதிரில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்த சந்தேக நபர்களும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

பிலியந்தலை, மடபாத்தை பிரதேசத்தில் வசித்த 32 வயதான அருண லக்மால் ஜயவர்த்தன மற்றும் கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த விஜயகுமார் பிரகாஷ் ஆகியோரே பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காண்பிக்கச் சென்ற வேளையில் பொலிஸாரின் ஆயுதங்களை பறிக்க முயற்சித்ததாகவும் இதனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றது.

இந்த ஆண்டு ஆரம்பமானது முதல் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES